Monday, March 7, 2022

வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்


மலன் ஸ்டேன்லி எழுதிய இந்த அபுதினம் -  memoir-எனும் நினைவுக் குறிப்பிலிருந்து, ஒரு கருப்பொருளை மையமாக கொண்டு படைக்கும் சுயசரிதை வகையை சார்ந்தது.

மேற்கத்திய நாடுகளில் பிரசத்தி பெற்ற இந்நாவல் வகை, தமிழில் அபூர்வம். தமிழ்நாட்டில் வாழும் எழுத்தாளர் ஒருவர்  memoir  எழுத முற்படுகையில், ஒன்று - அவரது வாழ்க்கையில் நிறைய சுவராஸ்யமான விடயங்கள் நடந்திருக்கவேண்டும். இரண்டு - கூர்மையான ஞாபகசக்தியும், நடந்தவற்றை எழுத்தில் வடிக்கும் திறனும் வேண்டும். மூன்று - இவ்விரண்டையும், தான் தேர்ந்தெடுத்த கருப்பொருளோடு கட்டி இணைத்து ஒரு செம்மையான வாழ்க்கை தரிசனத்தை முன்மொழியவேண்டும்.