Showing posts with label kullachchiththan. Show all posts
Showing posts with label kullachchiththan. Show all posts

Friday, June 18, 2010

குள்ளச்சித்தன் சரித்திரம் - மற்றுமொரு வாசிப்பனுபவம்


குள்ளச் சித்தன் சரித்திரம்
ஆசிரியர்யுவன் சந்திரசேகர்
மதிப்புரை:  ஜெகதீஷ் குமார்
 

பெருங்கனவு www.jekay2ab.blogspot.com
 
ஏழுவருடங்களுக்கு முன் நான் ஆடை பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் தரக்கட்டுப்பாட்டு அலுவலராக சொற்ப ஊதியத்திற்குப் பணிபுரிந்து வந்த சமயம், ஒரு நண்பகலில் பதினான்கு வயதுள்ள ஒரு சிறுவன் எங்கள் வாசலில் நின்றான். ஜோதிடம் பார்ப்பவன் அவன். நான் அப்போது வீட்டிலில்லை. அம்மாவுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை உண்டு. ஆண்கள் இல்லாத வீட்டில் ஜோதிடம் பார்க்கமாட்டேன் என்றுவிட்டான் அவன். அப்போது அப்பாவும் வீட்டிலில்லாததால் நான் வரும் வரை காத்திருந்தார்கள். அவன் என் கையைப் பார்த்துவிட்டு ‘இவரு டவுன் பஸ்ஸூ மாதிரி ஏரோப்ளேன்ல போய்ட்டு வருவாரு’ என்றான். எனக்குத் திகைப்பாயிருந்தது. அப்போதுதான் நான் மாலத்தீவு ஆசிரியர் பணிக்கான நேர்முகத்தேர்வில் தேர்வாகியிருந்தேன் நான் வரும் முன் வீட்டிலுள்ளவர்கள் அவனிடம் எதுவும் உளறியது போலவும் தெரியவில்லை. எல்லாருக்கும் சொல்லிமுடித்தபின் நான் அவனிடம் பத்து ரூபாயை நீட்டினேன். அவன் இரண்டு ரூபாய்க்கு மேல் தங்கள் குழுவில் வாங்கக் கூடாதென்றான்.

Tuesday, March 9, 2010

குள்ளச் சித்தன் சரித்திரம்

குள்ளச் சித்தன் சரித்திரம் :
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்
ஆசிரியர் : யுவன் சந்திரசேகர்

சில மாதங்களுக்கு முன்பு ஜெயமோகன் அவர்களைச் சந்தித்தபோது, தற்கால எழுத்தாளர் ஒருவரை சிபாரிசு செய்யக் கேட்டேன். சிறிதும் தயக்கம் இல்லாமல் யுவன் சந்திரசேகரைக் குறிப்பிட்டார்.சமீபத்தில் உயிர்ம்மையில் யுவன் எழுதிய சிறுகதை வெளி வந்தது.சரியாகப் புரியா விட்டாலும், கதை என்னவோ மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. 'குள்ளச்சித்தன் சரித்திரம்' ஏதேச்சையாக அகப்பட்ட போது, இம்முறை யுவனின் மாய உலகத்திற்குள் எப்படியும் பிரவேசித்துவிட வேண்டும் எனக் கறுவிக்கொண்டேன்.
'மாற்று மெய்ம்மை' என அடிக்கடி தட்டுப் படுகிறதே என்று தேடியதில் கிடைத்தது இந்தச் சுட்டி. http://en.wikipedia.org/wiki/Parallel_universe_(fiction). இது என்னவெனில், நாம் காணும் உலகத்தைப் போல், இன்னும் பல உலகங்கள் ஒரே சமயத்தில் சஞ்சரிக்கும் சாத்தியக்கூறை, கதை சொல்லும் உத்தியாகக் கையாள்வதைப் பற்றியது.