குள்ளச் சித்தன் சரித்திரம்
ஆசிரியர்: யுவன் சந்திரசேகர்
மதிப்புரை: ஜெகதீஷ் குமார்
பெருங்கனவு www.jekay2ab.blogspot.com
ஆசிரியர்: யுவன் சந்திரசேகர்
மதிப்புரை: ஜெகதீஷ் குமார்
பெருங்கனவு www.jekay2ab.blogspot.com
ஏழுவருடங்களுக்கு முன் நான் ஆடை பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில்
தரக்கட்டுப்பாட்டு அலுவலராக சொற்ப ஊதியத்திற்குப் பணிபுரிந்து வந்த சமயம்,
ஒரு நண்பகலில் பதினான்கு வயதுள்ள ஒரு சிறுவன் எங்கள் வாசலில் நின்றான்.
ஜோதிடம் பார்ப்பவன் அவன். நான் அப்போது வீட்டிலில்லை. அம்மாவுக்கு
இதிலெல்லாம் நம்பிக்கை உண்டு. ஆண்கள் இல்லாத வீட்டில் ஜோதிடம்
பார்க்கமாட்டேன் என்றுவிட்டான் அவன். அப்போது அப்பாவும் வீட்டிலில்லாததால்
நான் வரும் வரை காத்திருந்தார்கள். அவன் என் கையைப் பார்த்துவிட்டு ‘இவரு
டவுன் பஸ்ஸூ மாதிரி ஏரோப்ளேன்ல போய்ட்டு வருவாரு’ என்றான். எனக்குத்
திகைப்பாயிருந்தது. அப்போதுதான் நான் மாலத்தீவு ஆசிரியர் பணிக்கான
நேர்முகத்தேர்வில் தேர்வாகியிருந்தேன் நான் வரும் முன் வீட்டிலுள்ளவர்கள்
அவனிடம் எதுவும் உளறியது போலவும் தெரியவில்லை. எல்லாருக்கும்
சொல்லிமுடித்தபின் நான் அவனிடம் பத்து ரூபாயை நீட்டினேன். அவன் இரண்டு
ரூபாய்க்கு மேல் தங்கள் குழுவில் வாங்கக் கூடாதென்றான்.