மறைவாய்ச் சொன்ன கதைகள்
தொகுப்பு: கி.ரா., மற்றும் கழனியூரன்
வெளியீடு: உயிர்ம்மை பதிப்பகம்
கி.
ராவும், கழனியூரனும் தொகுத்த நூறு நாட்டுப்புறப் பாலியல் கதைகள் அடங்கிய
இந்தப் புத்தகத்தின் பரிந்துரையில், அழகு கேட்டு விடாமலிருக்க, பெரும்பாலும் கி.ராவின் வாக்கியங்களையே உபயோகித்து இருக்கிறேன்.
வேறுவகையில் justify செய்ய முடியவில்லை. "பாலியல் மனக் கோணல்கள்
எப்படியெல்லாம் இருந்தது என்று இவை சொல்கின்றன. மெய்யாகவே சிலர் பாலியல்
கதைகள் என்பது அசிங்கம் என்று கருதுகிறர்கள். 'பிள்ளை நல்லது, பீ
பொல்லாது' என்ற சொலவடையை இவர்களுக்குச் சொல்லத் தோன்றுகிறது... இந்த
சேகரிப்பில் ஒரு கெட்ட வார்த்தை கூட இல்லை". கி.ரா தமது முன்னுரையில்,
இந்தக் கதைகளை வெளியிட யாருமில்லாததால் தாமே செய்வதாகச் சொல்லுகிறார்.
இக்கதைகளின் காலக்கட்டத்தை, தி.மு, தி.பி. (திருமணம் என்ற மரபு வருவதற்கு
முன்னால், பின்னால் ) என்று கொள்ள வேண்டுமாம்.
Friday, September 10, 2010
Monday, August 30, 2010
மகாகவி பாரதியார்
மகாகவி பாரதியார்
ஆசிரியர்: வ. ரா
பரிந்துரை: சண்முகம்
காலம்: 1910.
ஊர்: புதுவை.
இடம்: பாரதி வசிக்கும் வீடு.
பாரதியை அதுவரை பார்த்திராத வ.ரா அவரை பார்க்கப் போய் இருக்கிறார். நமஸ்கரித்தவுடன் 'யார் ?' என்று வினவுகிறார். வ.ரா. இங்கிலீஷில் தன்னை அறிமுகப்படுத்தத் தொடங்குகிறார். உடனே பாரதி, 'அடே பாலு ! வந்தவர் உனக்கு இணையாக இங்கிலீஷ் பொழிகிறாரடா ! அவரிடம் நீ பேசு. எனக்கு வேலையில்லை' என்று உரக்கக் கத்திவிட்டு பின்னர் வ.ரா விடம் 'ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு இன்னும் எவ்வளவு காலம் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும் ? ' என்று வருத்தப் பட்டிருக்கிறார்.
இது தான் 'மகாகவி பாரதியார்' நூலின் தொடக்கம்.
Labels:
vaa.raa. வ. ரா,
பாரதியார்
Sunday, August 22, 2010
ஆயிஷா - குறுநாவல்
ஆயிஷா
பரிந்துரை: விருட்சம்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் ,
7 , இளங்கோ சாலை, சென்னை - 18
( 044 - 24339024 / 24332924 / 24332424 )
சமீபத்தில் மனதை பாதித்த இந்த சிறுகதை, ஆயிஷா
தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல் தான் இது.
பள்ளிக்கூடங்கள், பலிக்கூடங்கள் ஆகிவிட்டன அல்லவா... இந்த யதார்த்தத்தை போட்டுஉடைத்து தமிழ் சூழலில் மட்டுமின்றி (8 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு) உலகெங்கும் கல்வி ஆர்வலர்களின் மனசாட்சியை புரட்டிப்போட்ட ஒரு இயக்கம் இந்த படைப்பு.
இன்றும் லட்சக்கானவர்களை கல்வி குறித்த விமர்சனப் பார்வைக்குள் இழுக்கும் சக்திவாய்ந்த படைப்பு, இரா. நடராசனை, 'ஆயிஷா நடராசன்' என்றே அறிய வைத்த கதை. கீழ்கண்ட சுட்டியிலுருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ்: http://www.eranatarasan.com/ download/AYEESHA_tamil.pdf
ஆங்கிலம்: http://www.eranatarasan.com/ download/AYEESHA_english.pdf
பரிந்துரை: விருட்சம்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் ,
7 , இளங்கோ சாலை, சென்னை - 18
( 044 - 24339024 / 24332924 / 24332424 )
சமீபத்தில் மனதை பாதித்த இந்த சிறுகதை, ஆயிஷா
தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல் தான் இது.
பள்ளிக்கூடங்கள், பலிக்கூடங்கள் ஆகிவிட்டன அல்லவா... இந்த யதார்த்தத்தை போட்டுஉடைத்து தமிழ் சூழலில் மட்டுமின்றி (8 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு) உலகெங்கும் கல்வி ஆர்வலர்களின் மனசாட்சியை புரட்டிப்போட்ட ஒரு இயக்கம் இந்த படைப்பு.
இன்றும் லட்சக்கானவர்களை கல்வி குறித்த விமர்சனப் பார்வைக்குள் இழுக்கும் சக்திவாய்ந்த படைப்பு, இரா. நடராசனை, 'ஆயிஷா நடராசன்' என்றே அறிய வைத்த கதை. கீழ்கண்ட சுட்டியிலுருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ்: http://www.eranatarasan.com/
ஆங்கிலம்: http://www.eranatarasan.com/
Tuesday, August 17, 2010
சாயாவனம்
சாயாவனம்
ஆசிரியர் : சா. கந்தசாமி
பதிப்பகம் : காலச்சுவடு
பரிந்துரை : ஜெகதீஷ் குமார்
தக்கையின் மீது நான்கு கண்கள் என்கிற அபூர்வமான சிறுகதைதான் நான் வாசித்த சா. கந்தசாமியின் முதல் படைப்பு. தலைப்பு போலவே கதையும் தனித்தன்மை கொண்டிருந்தது. ஒரு தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையில் ஓடையில் மீன் பிடிக்கையில் நடக்கும் போட்டியும், தாத்தாவுக்குப் பேரனின் மேலுள்ள ego clash கோபமாக வெளிப்படுவதும் மிக இயல்பாகவும் அழகாகவும் வெளிப்பட்டிருந்த கதை.
Labels:
environment,
saa.kanthasaamy,
saayaavanam,
இயற்கை,
சா.கந்தசாமி,
சாயாவனம்,
சுற்றுச்சூழல்
Thursday, August 5, 2010
கானல் வரி - தமிழ்நதி

கானல் வரி
ஆசிரியர்: தமிழ்நதி
பதிப்பகம்: உயிர்மை
பரிந்துரை: சண்முகம்
தமிழ்நதியை நான் "ஈழவிடுதலையின் தோல்வியில் இணைந்த சாருவும் ஜெயமோகனும்" என்னும் காத்திரமான கட்டுரையினூடாகத் தான் அறிந்துகொண்டேன். இந்தக் கட்டுரையின் பின்புலத்தில் உள்ள தார்மிகச் சீற்றமும் நியாயமும் என்னை வெகுவாக கவர்ந்தன.
என் வரையில், சீரிய இலக்கியம் படைக்கும் பெண் எழுத்தாளர் வரிசையில் அம்பையை மட்டுமே நான் அறிந்திருந்தேன். சீரிய பெண் எழுத்தாளர்கள் அருகிப் போன நம் சமூகத்தில், பெண்ணின் மனவோட்டத்தை பெரும்பாலும் ஆண்களே பதிவு செய்யும் இந்த அவல நிலையில், 'கானல் வரி' யின் வாயிலாக, ஒரு பெண்ணின் உலகை, அவள் காணும் உலகை தரிசிக்க ஆவலாய் நுழைந்தேன்.
Labels:
கானல் வரி தமிழ்நதி


