Showing posts with label அமலன் ஸ்டேன்லி. Show all posts
Showing posts with label அமலன் ஸ்டேன்லி. Show all posts

Monday, March 7, 2022

வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்


மலன் ஸ்டேன்லி எழுதிய இந்த அபுதினம் -  memoir-எனும் நினைவுக் குறிப்பிலிருந்து, ஒரு கருப்பொருளை மையமாக கொண்டு படைக்கும் சுயசரிதை வகையை சார்ந்தது.

மேற்கத்திய நாடுகளில் பிரசத்தி பெற்ற இந்நாவல் வகை, தமிழில் அபூர்வம். தமிழ்நாட்டில் வாழும் எழுத்தாளர் ஒருவர்  memoir  எழுத முற்படுகையில், ஒன்று - அவரது வாழ்க்கையில் நிறைய சுவராஸ்யமான விடயங்கள் நடந்திருக்கவேண்டும். இரண்டு - கூர்மையான ஞாபகசக்தியும், நடந்தவற்றை எழுத்தில் வடிக்கும் திறனும் வேண்டும். மூன்று - இவ்விரண்டையும், தான் தேர்ந்தெடுத்த கருப்பொருளோடு கட்டி இணைத்து ஒரு செம்மையான வாழ்க்கை தரிசனத்தை முன்மொழியவேண்டும்.