மாதொருபாகன்
பெருமாள் முருகன்
காலச்சுவடு பதிப்பகம்
மூன்றாம் பதிப்பு 2012
திருச்செங்கோட்டில் இருந்து ஏழெட்டு கல் தொலைவில் உள்ள
ஆனங்கூர் என்ற குக்கிராமத்தில் வசிக்கும் குடியானவன் காளியும் அவன் மனைவி
பொன்னாவும் தான் மாதொருபாகனின் மையப்பாத்திரங்கள். கதையில் வரும் தகவல்களைக் கொண்டு, கதை நிகழ்ந்த
காலம் 1938/39 என ஊகிக்க முடிகிறது. இலகுவான
நடையில் நேரடியாக கதையைச் சொல்லும் எளிய நாவல் போல தோற்றமளித்தாலும்,
இது பல அடுக்குகள் கொண்ட நாவல்.
