Showing posts with label பாரதியார். Show all posts
Showing posts with label பாரதியார். Show all posts

Friday, December 12, 2014

பாட்டானால் என்ன, கட்டுரையானால் என்ன?


பாரதி நினைவுகள்
யதுகிரி அம்மாள்
சந்தியா பதிப்பகம்
மூன்றாம் பதிப்பு, 2014
விலை 60 ரூ



பாரதியார் ஆசிரியராக இருந்த ‘இந்தியா’ பத்திரிக்கையை நடத்தியவர் ஸ்ரீ ஸ்ரீநிவாசாச்சாரியார்.  பாரதியாரும், ஸ்ரீ ஸ்ரீநிவாசாச்சாரியாரும் புதுச்சேரியில் அடைக்கலமடைந்திருந்த காலத்தில், இருவரது குடும்பங்களும் நெருங்கிப் பழகினர்.  ஸ்ரீநிவாசாச்சாரியரியன் மகள், ஸ்ரீமதி யதுகிரி அம்மாள்.  அவரது வார்த்தைகளில் சொல்லப்போனால், “பாரதியாரின் அபிமான புத்திரி”.  யதுகிரி அம்மாள், சிறுமியாக இருந்த போது பாரதியுடன் நெருங்கிப் பழகிய காலங்களின் நினைவுகளே இந்தப் பொக்கிஷம்.  பாரதியைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் படிக்க வேண்டிய புத்தகம். 

அதிலிருந்து ஒரு அத்தியாயம்.

Monday, August 30, 2010

மகாகவி பாரதியார்



மகாகவி பாரதியார்
ஆசிரியர்: வ. ரா
பரிந்துரை: சண்முகம்







காலம்: 1910.
ஊர்: புதுவை.
இடம்: பாரதி வசிக்கும் வீடு.

பாரதியை அதுவரை பார்த்திராத வ.ரா அவரை பார்க்கப் போய் இருக்கிறார். நமஸ்கரித்தவுடன் 'யார் ?' என்று வினவுகிறார். வ.ரா. இங்கிலீஷில் தன்னை அறிமுகப்படுத்தத் தொடங்குகிறார். உடனே பாரதி, 'அடே பாலு ! வந்தவர் உனக்கு இணையாக இங்கிலீஷ் பொழிகிறாரடா ! அவரிடம் நீ பேசு. எனக்கு வேலையில்லை' என்று உரக்கக் கத்திவிட்டு பின்னர் வ.ரா விடம் 'ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு இன்னும் எவ்வளவு காலம் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும் ? ' என்று வருத்தப் பட்டிருக்கிறார்.

இது தான் 'மகாகவி பாரதியார்' நூலின் தொடக்கம்.