Showing posts with label மாதொருபாகன். Show all posts
Showing posts with label மாதொருபாகன். Show all posts

Saturday, April 25, 2015

மாதொருபாகன் - 2


மாதொருபாகன் - 1 இன் தொடர்ச்சி...

மாதொருபாகனின் இன்னொரு குறிப்பிடத் தக்க அம்சம் அந்த கால கட்டத்து குடியானவனின் வாழ்க்கையை ஆவணப் படுத்துவது.  குடியானக் கவுண்டனும்கள்ளிறக்கும் சாணானும்காட்டில் வேலை செய்யும் சக்கிலியும் ஒரே காற்றைச் சுவாசித்து வாழ்ந்தாலும்அவர்களுக்கிடையே இருக்கும் சமுதாய வேறுபாடுகளை பெருமாள் முருகன் மிகையின்றிச் சித்தரித்திருக்கிறார்.    குடியானவனின் வாழ்க்கையில் சொத்தும்வாரிசும்  முக்கியப் பங்கை வகிக்கின்றன.  

மாதொருபாகன் - 1

மாதொருபாகன்
பெருமாள் முருகன்
காலச்சுவடு பதிப்பகம்
மூன்றாம் பதிப்பு 2012




திருச்செங்கோட்டில் இருந்து ஏழெட்டு கல் தொலைவில் உள்ள ஆனங்கூர் என்ற குக்கிராமத்தில் வசிக்கும் குடியானவன் காளியும் அவன் மனைவி பொன்னாவும் தான் மாதொருபாகனின் மையப்பாத்திரங்கள்.  கதையில் வரும் தகவல்களைக் கொண்டு, கதை நிகழ்ந்த காலம் 1938/39 என ஊகிக்க முடிகிறது.  இலகுவான நடையில் நேரடியாக கதையைச் சொல்லும் எளிய நாவல் போல தோற்றமளித்தாலும், இது பல அடுக்குகள் கொண்ட நாவல்.