Monday, September 30, 2013

ஞானமடைதல் என்ற புதிர் - பாகம் 1

ஞானமடைதல்   என்ற   புதிர்
 
யு ஜி கிருஷ்ணமூர்த்தி

கண்ணதாசன் பதிப்பகம்
விலை:  80 ரூபாய்


இருபதாம் நூற்றாண்டில்,   இந்தியாவிலிருந்து தோன்றிய மகத்தான தத்துவ ஞானிகளுள் ஜே கிருஷ்ணமூர்த்தியும் (ஜேகே),   யு ஜி கிருஷ்ணமூர்த்தியும் (யுஜி)  அடக்கம்.   ஜேகே  உலகப்பிரசத்தியானவர்;    யுஜியை அறிந்தவர்கள் சிலரே.    பெயரை மீறி, இருவருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு.   இருவரும் சமகாலத்தவர்கள். தங்கள் தத்துவ விளக்கங்களில் மரபை உடைத்தெறிந்தவர்கள். ‘உலகை மீட்க வந்த மீட்பர்’   எனத் தத்துவ உலகம் ஜேகே-யை கொண்டாடிய போது,   ‘முதலில் இந்த உலகை மீட்பர்களிடமிருந்து (ஜேகே உள்பட) மீட்க வேண்டும்’  என்று சொன்னவர் யுஜி.  

Friday, September 6, 2013

பெருகும் வேட்கை

பெருகும் வேட்கை 
அழகிய பெரியவன்
வகை: கட்டுரைத் தொகுப்பு 
பதிப்பகம்:உயிர்மை
விலை: ரூ. 100/-

பரிந்துரை: கரிகாலன் /சண்முகம்





இந்தப் புத்தகம் அழகிய பெரியவன் எழுதிய இருபத்தி இரண்டு கட்டுரைகளின் தொகுப்பு. நேரடி அனுபவத்தைப் பின்புலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைகளில் பல உங்களை, சட்டென்று நிமிர்ந்து உட்கார வைக்கும். கட்டுரைகளில் பெரும்பாலானவை கல்வியைப் பற்றியும், சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும் பேசுபவை.



Wednesday, August 28, 2013

வால்மீகிக்கு இல்லாத தயக்கம் நமக்கு ஏன்?


1943இல் இருந்து காந்தி சுட்டுக் கொல்லப் பட்ட வரை, காந்தியிடம் செயலராகப் பணிபுரிந்த திரு.கல்யாணம் அவர்களின் அனுபவங்களைப் பின்புலமாக கொண்ட நாவல், ":ஆகஸ்ட் 15".  

இந்த நாவலைப் பற்றிய மதிப்பீட்டில் திரு. வெங்கட் சுவாமிநாதன் காந்தியைப் பற்றிய கறாரான விமரிசனங்களை முன்வைக்கிறார்.  

இந்த நாவலை படிக்கத் தூண்டும் மதிப்பீடு. 

Sunday, August 18, 2013

பெத்தவன்

 பெத்தவன், 40 பக்கங்கள்
ஆசிரியர் :  இமையம்
 பாரதி பதிப்பகம்


ஒரு spoiler alert :  இந்தக் கதை எழுதப்பட்டு ஓரிரு மாதங்களில் கதையில் உள்ளது போலவே தருமபுரி மாவட்டம் நத்தம் காலனி சம்பவம் நடைபெற்றது.  கடலூர் மாவட்டம் தொழுதூர் கிராமத்தில் ஆதி திராவிடர் நலத்துறை சார்ந்த பள்ளியில் ஆசிரியராக இருக்கும் இமையம் 'கோவேறு கழுதைகள்' மற்றும் 'ஆறுமுகம்' ஆகிய நாவல்கள் மூலம் புகழ் பெற்றவர்.  தாம் வாழும் மண்ணின் சமூக நிகழ்வுகளைத துணிச்சலாகப் படம் பிடித்துக் காட்டுவதால் அவரது எழுத்து யோக்கியமானதாக இருக்கிறது.

Thursday, August 15, 2013

ஆதியூர் அவதானி சரிதம்



 

ஆதியூர் அவதானி சரிம் 
வித்துவான் தூ.வி. சேஷையங்கார்
வகை: அம்மானை வடிவிலான நாவல்
விஜயா பதிப்பகம்
விலை: ரூ 60/-





கடந்த வருடம், விஜயா பதிப்பகத்தில் பல புத்தகங்கள் மொத்தமாக வாங்கிய பின்னர், பணம் கட்ட கீழே வந்த போது, கல்லாவில் இருந்த விஜயா பதிப்பக முதலாளி நான் வாங்கிய புத்தக்களைப் பற்றி பேச்சுக் கொடுத்துக் கொண்டே ரசீது எழுதினார்.