Monday, February 2, 2015

கொற்கை நன்றே

கொற்கை

ஆசிரியர் : ஜோ.டி.குருஸ்

காலச்சுவடு பதிப்பகம்

சாகித்ய அகாடமி பரிசு பெற்றது







                                                                       
வணிகக் கப்பல் கழகம் ஒன்றில் அதிகாரியாகப் பணியாற்றும் ஜோ.டி.குரூஸின் இரண்டாவது நாவல் கொற்கை   இவரது முதல் நாவலான 'ஆழி சூழ் உலகு'ம்  பரதர் வாழ்வு பற்றியதே.  இந்த நாவல்களில் சாமியார்கள் மற்றும் ஊர்ப் பெரிய மனிதர்களின் 'யோக்கியதையை' விவரித்து இருந்ததால் இவரை ஊரை விட்டு விலக்கி வைத்திருக்கிறார்கள்.