Tuesday, May 25, 2010

கண்ணீரால் காப்போம் - பிரபஞ்சன்


கண்ணீரால் காப்போம் 
ஆசிரியர்:  பிரபஞ்சன்
பக்கங்கள் : 304


வரலாற்றுச் சான்றுகளின் உதவியுடன் புதுவையின் முன்னூறு வருட வரலாற்றை நான்கு பாகங்களாக (மூவாயிரம் பக்கங்கள்) எழுதினார் பிரபஞ்சன்.  அந்த வரலாற்றுத் தொகுப்பின் மூன்றாம் பகுதி தான் 'கண்ணீரால் காப்போம்'.  பிரஞ்சுக் காலனி ஆதிக்கம் புதுச்சேரியில் காலூன்றி  பரிணமித்ததை மானுடம் வெல்லும் மற்றும் வானம் வசப்படும்   புதினங்கள் அழகாய் சித்தரித்தன.  'கண்ணீரால் காப்போம்',  புதுவையின் விடுதலைப் போரின் தொடக்கக் காலம் (1890 - 1934) பற்றியது.   (பிரெஞ்சு காலனி ஆதிக்கத்திடமிருந்து புதுச்சேரி விடுதலை பெற்ற 1954-ஆம் ஆண்டு வரை நடப்பவை நான்காம் பகுதியில் புனையப்பட்டிருக்கிறது).

Sunday, May 16, 2010

உண்மை கலந்த நாட்குறிப்புகள்

உண்மை கலந்த நாட்குறிப்புகள்
உயிர்மை பதிப்பகம் 
 
மெயின்லேன்ட் தமிழகத்தில் பிறக்காத தமிழ் எழுத்தாளரின் படைப்பை வாசிக்கும் முதலும் புதியதுமான அனுபவம்.
அ.முத்துலிங்கம்,   இலங்கையின் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து, பின்னர் கொழும்பு, சியாரா லியோன், சூடான், நைரோபி,   நமிபியா, சோமாலியா, அமெரிக்கா, கனடா, என்று உலகத்தின் எட்டுத் திக்குகளுக்கும் சென்று தனது ரசமான அனுபவத்தை, சுவாரஸ்யமான கலைச்செல்வமாய் இந்நூலில் கொணர்ந்திருக்கிறார்.

Friday, May 14, 2010

பாலகாண்டம் - இலட்சுமணப்பெருமாள்


பாலகாண்டம் 
ஆசிரியர்: இலட்சுமணப்பெருமாள்
பரிந்துரை: சண்முகம்
பதிப்பகம்: தமிழினி
பக்கங்கள்: 160


"என்னமாப் படம் பிடிக்கிறார் விசயங்களை"   என்று கி. ராசநாரயணனே வியக்கும் எழுத்தாளர் இலட்சுமணப் பெருமாள்.


இவரது சிறுவயதிலே,   இவருடைய முதிலித்தாய், காதில் வண்டிக்கம்மல் ஆட ஆட கதை கதையாய்ச் சொல்லி வளர்த்திருக்கிறாள்.    அதற்கு பின்னர் என்ன என்ன வேலையெல்லாம் செய்து வளர்ந்திருக்கிறார் பாருங்கள்:    கூலி விவசாயம்,    மைக்செட் தொழிலாளி,    பால் பண்ணையில வேல,    நிப்புக் கம்பெனி தொழிலாளி,    பஸ்ல கண்டக்டர்,    லாரியில கிளீனர்,    மேடையில வில்லிசைக் கச்சேரி,    தீப்பெட்டி  உற்பத்தியாளி,   பெட்டிக்கடை வியாபாரி...