Showing posts with label Barathiar. Show all posts
Showing posts with label Barathiar. Show all posts

Friday, December 12, 2014

பாட்டானால் என்ன, கட்டுரையானால் என்ன?


பாரதி நினைவுகள்
யதுகிரி அம்மாள்
சந்தியா பதிப்பகம்
மூன்றாம் பதிப்பு, 2014
விலை 60 ரூ



பாரதியார் ஆசிரியராக இருந்த ‘இந்தியா’ பத்திரிக்கையை நடத்தியவர் ஸ்ரீ ஸ்ரீநிவாசாச்சாரியார்.  பாரதியாரும், ஸ்ரீ ஸ்ரீநிவாசாச்சாரியாரும் புதுச்சேரியில் அடைக்கலமடைந்திருந்த காலத்தில், இருவரது குடும்பங்களும் நெருங்கிப் பழகினர்.  ஸ்ரீநிவாசாச்சாரியரியன் மகள், ஸ்ரீமதி யதுகிரி அம்மாள்.  அவரது வார்த்தைகளில் சொல்லப்போனால், “பாரதியாரின் அபிமான புத்திரி”.  யதுகிரி அம்மாள், சிறுமியாக இருந்த போது பாரதியுடன் நெருங்கிப் பழகிய காலங்களின் நினைவுகளே இந்தப் பொக்கிஷம்.  பாரதியைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் படிக்க வேண்டிய புத்தகம். 

அதிலிருந்து ஒரு அத்தியாயம்.