Friday, September 10, 2010

மறைவாய்ச் சொன்ன கதைகள் - நாட்டார் கதைக்களஞ்சியம்

மறைவாய்ச் சொன்ன கதைகள் 
தொகுப்பு: கி.ரா., மற்றும் கழனியூரன்
வெளியீடு: உயிர்ம்மை பதிப்பகம்


கி. ராவும், கழனியூரனும் தொகுத்த நூறு நாட்டுப்புறப் பாலியல் கதைகள் அடங்கிய இந்தப் புத்தகத்தின் பரிந்துரையில், அழகு கேட்டு விடாமலிருக்க,  பெரும்பாலும் கி.ராவின் வாக்கியங்களையே உபயோகித்து இருக்கிறேன்.  வேறுவகையில் justify செய்ய முடியவில்லை.  "பாலியல் மனக் கோணல்கள் எப்படியெல்லாம் இருந்தது என்று இவை சொல்கின்றன.  மெய்யாகவே சிலர் பாலியல் கதைகள் என்பது அசிங்கம் என்று கருதுகிறர்கள்.  'பிள்ளை நல்லது, பீ பொல்லாது' என்ற சொலவடையை இவர்களுக்குச் சொல்லத் தோன்றுகிறது...  இந்த சேகரிப்பில் ஒரு கெட்ட வார்த்தை கூட இல்லை".   கி.ரா தமது முன்னுரையில், இந்தக் கதைகளை வெளியிட யாருமில்லாததால் தாமே செய்வதாகச் சொல்லுகிறார்.  இக்கதைகளின் காலக்கட்டத்தை, தி.மு, தி.பி. (திருமணம் என்ற மரபு வருவதற்கு முன்னால், பின்னால்  ) என்று கொள்ள வேண்டுமாம்.