Wednesday, June 30, 2010

கண்ணீரும் புன்னகையும் – சந்திரபாபுவின் வாழ்வு


கண்ணீரும் புன்னகையும்
ஆசிரியர்:  முகில்
பதிப்பகம்:  கிழக்கு
பரிந்துரை:  ஜெகதீஷ் குமார்



சந்திரபாபு என்கிற மகா ஆளுமையின் தாக்கம் முப்பது வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏற்பட்டிருப்பதென்பது இன்றியமையாததொரு நிகழ்வாகும். என் பதின்பருவத்தில் சந்திரபாபுவின் தத்துவப் பாடல்களை எனக்கு முந்தைய தலைமுறையினர் கொண்டாடிக் கொண்டிருந்ததைக் கண்டிருக்கிறேன். நகைச்சுவை நடிகர் என்ற பிம்பத்தையும் தாண்டி ஒரு தலைமுறைத் தமிழர்களின் பிரியத்துக்குரியவராகவும், பலரின் ஆற்றாமைகளையும், சோகங்களையும் பிரதிநிதித்துவப் படுத்துபவராகவும் இருந்திருக்கிறார் பாபு.
கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘கண்ணீரும் புன்னகையும்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எதற்காகவும், யாருக்காகவும் தன் தனித்துவத்தை விட்டுக் கொடுக்காது வாழ்ந்த ஒரு கலைஞனின் வாழ்வில்

Wednesday, June 23, 2010

கடல்புரத்தில் - மாற்றத்தின் ஓயா அலைகள்

கடல்புரத்தில்  
ஆசிரியர்: வண்ணநிலவன்
பதிப்பகம்: கிழக்கு
பரிந்துரை: கரிகாலன்


பல நூற்றாண்டு காலங்களாக வல்லத்தில் (படகில்) ஏறி, கடலில் மீன் பிடித்து வாழ்ந்த  மணப்பாட்டு கிராமத்து மக்களின் வாழ்க்கையைப் பற்றிய நாவல். நாவலின் முக்கிய கதா பாத்திரங்கள் பிலோமிக் குட்டியும், அவள் குடும்பமும்.  பிலோமிக் குட்டியின் அப்பச்சி குருஸ், அண்ணன் செபஸ்தி, அம்மை மரியா, அவர்களது வாழ்க்கையை ஒட்டி எளிய கதையாக தோன்றும் இந்த நாவல் பல தளங்களில் மனத்தைக் கவரும் நாவல்.



ஒரு சிறு குடும்பப் பிரச்னையில் ஆரம்பிக்கறது நாவல்.  வாத்தியார் வேலைக்குப் படித்து பக்கத்து ஊரில் வேலை செய்யும் செபஸ்திக்கு ஒரு தொழில் தொடங்க முதலீடு தேவை.  அதற்காக அப்பச்சி குரூசிடம், வல்லத்தையும் வீட்டையும் விற்று விட்டுத் தன்னுடன் வரச் சொல்லி அடிபோடுகிறான்.  வர மறுக்கும் அப்பச்சியிடம் செபஸ்தி, கோபத்துடன் கேட்கிறான்,    "அப்பம், நீர் என்னை ஏன் படிக்க வச்சீர்?  ஒம்மப் போல மீன் பிடிக்க வல்லம் கட்டிக் கொண்டு கடலுக்கு போயிருப்பேனே.  ஏன் நீரு என்னையப் படிக்க வச்சிரு...",  

Friday, June 18, 2010

குள்ளச்சித்தன் சரித்திரம் - மற்றுமொரு வாசிப்பனுபவம்


குள்ளச் சித்தன் சரித்திரம்
ஆசிரியர்யுவன் சந்திரசேகர்
மதிப்புரை:  ஜெகதீஷ் குமார்
 

பெருங்கனவு www.jekay2ab.blogspot.com
 
ஏழுவருடங்களுக்கு முன் நான் ஆடை பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் தரக்கட்டுப்பாட்டு அலுவலராக சொற்ப ஊதியத்திற்குப் பணிபுரிந்து வந்த சமயம், ஒரு நண்பகலில் பதினான்கு வயதுள்ள ஒரு சிறுவன் எங்கள் வாசலில் நின்றான். ஜோதிடம் பார்ப்பவன் அவன். நான் அப்போது வீட்டிலில்லை. அம்மாவுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை உண்டு. ஆண்கள் இல்லாத வீட்டில் ஜோதிடம் பார்க்கமாட்டேன் என்றுவிட்டான் அவன். அப்போது அப்பாவும் வீட்டிலில்லாததால் நான் வரும் வரை காத்திருந்தார்கள். அவன் என் கையைப் பார்த்துவிட்டு ‘இவரு டவுன் பஸ்ஸூ மாதிரி ஏரோப்ளேன்ல போய்ட்டு வருவாரு’ என்றான். எனக்குத் திகைப்பாயிருந்தது. அப்போதுதான் நான் மாலத்தீவு ஆசிரியர் பணிக்கான நேர்முகத்தேர்வில் தேர்வாகியிருந்தேன் நான் வரும் முன் வீட்டிலுள்ளவர்கள் அவனிடம் எதுவும் உளறியது போலவும் தெரியவில்லை. எல்லாருக்கும் சொல்லிமுடித்தபின் நான் அவனிடம் பத்து ரூபாயை நீட்டினேன். அவன் இரண்டு ரூபாய்க்கு மேல் தங்கள் குழுவில் வாங்கக் கூடாதென்றான்.

Wednesday, June 16, 2010

மத்தகம் - ஜெயமோகன்

மத்தகம்

ஆசிரியர்: ஜெயமோகன்

பரிந்துரை: சண்முகம்


குட்டியாய் இருந்தபோதே வெல்லம் கலக்காத சோற்றை சாப்பிடாது கேசவன். ஒரு ராஜ்ஜியத்திற்கே அதிகாரம் செலுத்தும் இளையதம்புரானின் செல்லப் பிராணியாக இருப்பதனால் தான் தனக்கு இந்த அதிகாரம் என்று வெல்லச் சோற்றின் ருசியை விட அதிகாரத்தின் ருசியை கேசவன் சிறுபிராத்திலிருந்தே நன்கு உணர்ந்து தான்வளர்ந்திருக்கும். தன்னை ஒருமுறை 'சனியன்' என்று திட்டிய மூத்த யானைப்பாகன் சீதரன் நாயர் என்கிற ஆசானை, தன் கால்களுக்கு இடையில் கிடத்தி, தன் காலை நிதானமாய் அசானின் கால் மீது வைத்து மூங்கில் குச்சியை ஒடிப்பது போல ஒடித்து அதிகார அடுக்கில், தன் நிலையைத் தெளிவுற உணர்த்துகிறது. ஆசான், கேசவனின் இந்த அதிகார வெளிப்பாட்டை மிக இயற்கையான, ஏன் தெய்வாம்சமான் ஒன்றாகவே ஏற்றுக்கொண்டு,

Sunday, June 6, 2010

தாமரை பூத்த தடாகம் - தியடோர் பாஸ்கரன்

தாமரை பூத்த தடாகம்
ஆசிரியர்: சு. தியடோர் பாஸ்கரன்
பதிப்பகம்: உயிர்மை

பரிந்துரை: சண்முகம்

'தாமரை பூத்த தடாகம்' என்ற இந்த நூல் தமிழுக்குப் புதிதும் அரிதுமான சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைத் தொகுப்பு.   சுயமான பார்வை, புதிய சொல்லாடல், அனுபவம் சார்ந்த உண்மையான அக்கறை, வசீகரிக்கும் மொழிநடை என பல சிறப்பான அம்சங்கள் பொருந்திய நூல்.

தமிழில் சுற்றுச் சூழல் குறித்து எழுதுவோர் மிகக் குறைவு.