Showing posts with label Hepsipaa Jesudhaasan. Show all posts
Showing posts with label Hepsipaa Jesudhaasan. Show all posts

Thursday, April 11, 2013

புத்தம் வீடு


புத்தம் வீடு 
ஹெப்சிபா ஜேசுதாசன்
காலச்சுவடு பதிப்பகம் (நவம்பர் 2011)

பனைவிளை  கிராமத்தில் இருக்கும் ஒரே ஒரு  ஒட்டு வில்லை வீட்டை  மிக விரிவாக விவரிப்பதில் ஆரம்பிகிறது இந்த நாவல்.   கிராமத்தவர் அனைவரும் அந்த வீட்டைப் புத்தம் வீடு என்று அழைக்கிறார்கள்.  சிதிலமடைந்த அந்த வீட்டின் பழம் பெருமையை பறை சாற்றுவது அந்த வீட்டின் உறுதியான தேக்கு மரத்தாலான கதவு மட்டுமே, என்பது போன்ற நுட்பமான வீட்டைப் பற்றிய விவரணைகள்  மூலம் நம்மை வெகு சீக்கிரத்திலேயே நாவலுக்குள் இழுத்துக் கொண்டு விடுகின்றார் ஹெப்சிபா ஜேசுதாசன்.