Showing posts with label Indira Paarthasarathi. Show all posts
Showing posts with label Indira Paarthasarathi. Show all posts

Monday, April 22, 2013

கிருஷ்ணா கிருஷ்ணா - கேட்டதைக் கொடுப்பவன்

 கிருஷ்ணா கிருஷ்ணா
ஆசிரியர்: இந்திரா பார்த்தசாரதி
கிழக்குப் பதிப்பகம்
216 பக்கங்கள்

நூல் தலைப்பைப் பார்த்ததும், 'கிருஷ்ணன் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதானே, இதில் என்ன புதிதாகச் சொல்கிறார்' என்று தோன்றும்; நிஜமாகவே புதிதாகத்தான் சொல்லியிருக்கிறார் இ .பா.
"ஒவ்வொருவருக்கும் அவருடைய அடி மனதில் நிறைவேறாத ஆசைகள் இருக்கும். அவற்றின் மொத்த உருவகம்தான் கிருஷ்ணன்.  அவன் ஒரு சமுதாயக் கனவு.  அவனை எந்த யுகத்திலும், அந்தந்தக் காலத்திய மதிப்பீடுகளுக்கேற்ப அர்த்தப்ப படுத்திக்கொள்ள முடியும் என்பதே அவன் தனிச் சிறப்பு. யார் எவ்வாறு அவனைக் காண விரும்புகின்றார்களோ அவ்வாறே அவன் அமைகிறான்" என்று முன்னுரையில் குறிப்பிடுவதை இந்த நூலை எழுதிய காரணமாகக் கொள்ளலாம்.  ராஜாஜி எழுதிய மகாபாரதம் போன்ற 'செய்தி அறிக்கை' வகைப்  புத்தகம் இல்லை இது. இ.பா.வின் வாசகர்கள் அவருடைய Metro  வாசகர்களுக்கான வழக்கமான நடையை இதிலும் காணலாம்.