Showing posts with label book review. Show all posts
Showing posts with label book review. Show all posts

Monday, April 22, 2013

கிருஷ்ணா கிருஷ்ணா - கேட்டதைக் கொடுப்பவன்

 கிருஷ்ணா கிருஷ்ணா
ஆசிரியர்: இந்திரா பார்த்தசாரதி
கிழக்குப் பதிப்பகம்
216 பக்கங்கள்

நூல் தலைப்பைப் பார்த்ததும், 'கிருஷ்ணன் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதானே, இதில் என்ன புதிதாகச் சொல்கிறார்' என்று தோன்றும்; நிஜமாகவே புதிதாகத்தான் சொல்லியிருக்கிறார் இ .பா.
"ஒவ்வொருவருக்கும் அவருடைய அடி மனதில் நிறைவேறாத ஆசைகள் இருக்கும். அவற்றின் மொத்த உருவகம்தான் கிருஷ்ணன்.  அவன் ஒரு சமுதாயக் கனவு.  அவனை எந்த யுகத்திலும், அந்தந்தக் காலத்திய மதிப்பீடுகளுக்கேற்ப அர்த்தப்ப படுத்திக்கொள்ள முடியும் என்பதே அவன் தனிச் சிறப்பு. யார் எவ்வாறு அவனைக் காண விரும்புகின்றார்களோ அவ்வாறே அவன் அமைகிறான்" என்று முன்னுரையில் குறிப்பிடுவதை இந்த நூலை எழுதிய காரணமாகக் கொள்ளலாம்.  ராஜாஜி எழுதிய மகாபாரதம் போன்ற 'செய்தி அறிக்கை' வகைப்  புத்தகம் இல்லை இது. இ.பா.வின் வாசகர்கள் அவருடைய Metro  வாசகர்களுக்கான வழக்கமான நடையை இதிலும் காணலாம்.

Sunday, May 16, 2010

உண்மை கலந்த நாட்குறிப்புகள்

உண்மை கலந்த நாட்குறிப்புகள்
உயிர்மை பதிப்பகம் 
 
மெயின்லேன்ட் தமிழகத்தில் பிறக்காத தமிழ் எழுத்தாளரின் படைப்பை வாசிக்கும் முதலும் புதியதுமான அனுபவம்.
அ.முத்துலிங்கம்,   இலங்கையின் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து, பின்னர் கொழும்பு, சியாரா லியோன், சூடான், நைரோபி,   நமிபியா, சோமாலியா, அமெரிக்கா, கனடா, என்று உலகத்தின் எட்டுத் திக்குகளுக்கும் சென்று தனது ரசமான அனுபவத்தை, சுவாரஸ்யமான கலைச்செல்வமாய் இந்நூலில் கொணர்ந்திருக்கிறார்.

Thursday, April 29, 2010

வானம் வசப்படும் (சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல்)

வானம் வசப்படும்
(சாகித்ய அகாதமி பரிசு பெற்றது)
எழுத்தாளர்: பிரபஞ்சன்
பதிப்பகம் : கவிதா பப்ளிஷர்ஸ்
பக்கங்கள்: 706

புதுச்சேரி பற்றிய வரலாற்று நாவலான 'மானுடம் வெல்லும்' என்ற  நூலின் தொடர்ச்சியாக வந்தது 'வானம் வசப்படும்'.  இதைத் தனி நாவலாகப் படிப்பதை விட, தேவையான பின்புலங்கள்  அடங்கிய முதல் நாவலின் தொடர்ச்சியாகப் படிப்பது உத்தமம்.  சிறந்த நூலுக்கான இந்திய அரசின் சாகித்ய அக்காதமி பரிசுடன், மாநில அரசுகளின் பல்வேறு பரிசுகளையும்

Friday, April 9, 2010

உறுபசி (1) : தீரா வலியின் ருசி


உறுபசி
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் 
பதிப்பகம்: உயிர்மை
விலை: ரூ. 75/-



'நாற்பத்தி இரண்டே வயதில், கல்யாணமாகிய ஓரிரு வருடங்களிலேயே,  அரசாங்க ஆசுபத்திரியில் இறந்து போகிறான் சம்பத்', என அதிர்ச்சியுடன் நாவல் ஆரம்பம் ஆகிறது.  அவன் இறுதிக் காரியங்களை முடித்த கையுடன், அவனது நண்பர்கள் துரைசாமி, அழகர், மாரியப்பன், மற்றும் சம்பத்தின் மனைவி ஜெயந்தி ஆகியோரின்  நினைவுகளின் வாயிலாக (flashback), சம்பத்தின் வாழ்க்கைப் பரிணாமத்தைக்  கொஞ்சம், கொஞ்சமாக விவரித்துக் கொண்டே செல்கிறார் ஆசிரியர் எஸ்.ரா.

கதையின் முதல் தளம், புறவயமான நிகழ்வுகள்.  நால்வரும் கல்லூரியில் பெண்களே இல்லாத தமிழ்ப் பிரிவில், ஒன்றாகப் படித்தவர்கள்.  

உறுபசி (2) : மதிப்புரை: திருமதி. மீனா நா. சுவாமி



உறுபசி
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் 
பதிப்பகம்: உயிர்மை
விலை: ரூ. 75/-

பட உதவி: jungle cookie

ஒரு இளைஞன் ஒத்துதவி வாழாமல் இயற்கை நியதி, சமூக நியதியை விட்டு விலகி, தன உயிராற்றலை இழந்து மரணத்தை எட்டும் ஒரு சோகம் நிறைந்த கதை.  சம்பத், நம் மனதில் துன்பத்தின் உருவாக நிலைத்து விடுகிறான்.  'கசப்பின் கோப்பை' கை தவறிக் கவிழ்ந்து சம்பத் துன்பத்தையே அனுபவிப்பதை என் மனம் நம்ப மறுக்கிறது.

Friday, April 2, 2010

எட்டுத்திக்கும் மதயானை

எட்டுத்திக்கும் மதயானை
எழுத்தாளர்: நாஞ்சில் நாடன் பதிப்பகம்: விஜயா பதிப்பகம்

தமிழின் சிறந்த பத்து புதினங்களில் ஒன்றெனப்  பல வருடங்களுக்கு முன் எங்கோ படித்த உடனே இந்த நூலை வாங்கியவன், பல வருடங்கள் கழித்தே தற்போது தான் வாசித்து முடித்தேன். என்ன தான் இலக்கியம் படித்தாலும், தலைப்பை வைத்து, நாவலின் முடிவில் எட்டுத் திக்கும் மதயானை முற்றுகையிடுவது போன்ற சூழ்நிலையில் கதை நாயகன் உழலுவதைக் குறிப்பதாக்கும் என யூகம் செய்து, முன் கூட்டியே முடிவை நிர்ணயித்து, சிறிது அசுவராஸ்யமாகவே தான் ஆரம்பித்தேன். ஒரு நாவல் எப்படி முடிகிறது என்பது நாவலின் உன்னதத்தைப் பெரும்பங்கு தீர்மானிக்கிறதா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.

Tuesday, March 9, 2010

குள்ளச் சித்தன் சரித்திரம்

குள்ளச் சித்தன் சரித்திரம் :
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்
ஆசிரியர் : யுவன் சந்திரசேகர்

சில மாதங்களுக்கு முன்பு ஜெயமோகன் அவர்களைச் சந்தித்தபோது, தற்கால எழுத்தாளர் ஒருவரை சிபாரிசு செய்யக் கேட்டேன். சிறிதும் தயக்கம் இல்லாமல் யுவன் சந்திரசேகரைக் குறிப்பிட்டார்.சமீபத்தில் உயிர்ம்மையில் யுவன் எழுதிய சிறுகதை வெளி வந்தது.சரியாகப் புரியா விட்டாலும், கதை என்னவோ மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. 'குள்ளச்சித்தன் சரித்திரம்' ஏதேச்சையாக அகப்பட்ட போது, இம்முறை யுவனின் மாய உலகத்திற்குள் எப்படியும் பிரவேசித்துவிட வேண்டும் எனக் கறுவிக்கொண்டேன்.
'மாற்று மெய்ம்மை' என அடிக்கடி தட்டுப் படுகிறதே என்று தேடியதில் கிடைத்தது இந்தச் சுட்டி. http://en.wikipedia.org/wiki/Parallel_universe_(fiction). இது என்னவெனில், நாம் காணும் உலகத்தைப் போல், இன்னும் பல உலகங்கள் ஒரே சமயத்தில் சஞ்சரிக்கும் சாத்தியக்கூறை, கதை சொல்லும் உத்தியாகக் கையாள்வதைப் பற்றியது.

Monday, March 1, 2010

மரப்பாச்சி

மரப்பாச்சி
எழுத்தாளர்: உமா மகேஸ்வரி
பதிப்பகம்: தமிழினி

ஓர் அழகிய இளம்பெண், தலை நிலம் நோக்கி, ஆழ்ந்த அகத்தாய்வு செய்வதைப் போன்ற அழகான சித்திரம் அந்தப்  புத்தகத்தின் அட்டையில் இருப்பதைப் பார்த்து அதை வாங்கினேன். இதில் இருந்தே நான் புத்தகம் தேர்வு செய்யும் 'அளகை '  நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்!  உமா மகேஸ்வரியின் பெயரை இதற்கு முன் எங்கும் கேள்விப்படாததால், அவரது சிறு கதைத் தொகுப்பான 'மரப்பாச்சி' என்ற அந்தப் புத்தகம் பல நாட்களாக என் அலமாரியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.  இரண்டு நாட்களுக்கு முன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் random ஆக  "மரப்பாச்சி"யை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  படித்து முடித்ததும் அசந்து போய் விட்டேன்!

Wednesday, February 10, 2010

விஷ்ணுபுரம் - மற்றுமொரு விமர்சனம்

விஷ்ணுபுரத்தின் மீதான விமர்சனங்களையும் விவாதங்களையும் தொகுத்தாலே தனியாக ஒரு பெரிய புத்தகம் போடலாம் போலிருக்கிறது.  இதோ, அதன் தாக்கத்தால் உருவான மற்றுமொரு வாசகர் சண்முகம் (ஹ்யூஸ்டன்) அவர்களின் விமர்சனம்...

காலத்தின் பெருவெளியில் உயரத்திலிருந்து, விஷ்ணுபுரம் எனும் ஊரை மையமாக கொண்டு, மூன்று வெவ்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த மானுடர்களின் ஞானத்தேடலைப் பற்றிய தரிசனமே விஷ்ணுபுரம். பலர் தேட, வெகு சிலரே கண்டடைய, தத்துவங்களைச் சுற்றி மதங்களும், அரசியலும் அதிகாரம் செலுத்த, ஆதி தெய்வ வழிபாட்டை வைதீகம் அபகரிக்க, வைதீகத்தை பௌத்தம் வெற்றி கொள்ள, வைதீகம் மீண்டும் மீள என மதங்கள் ஒன்றை ஒன்று ஆக்கிரமிக்க, ஒரு காலத்தில் நடக்கும் அதர்மங்களும் அபத்தங்களும் பின்னர் ஐதீகங்களாய் மாற - என பன்முகமாய் பிரம்மாண்டமாய் விரிகிறது.

Saturday, February 6, 2010

நாளை மற்றும் ஒரு நாளே!

முப்பது ஆண்டுகளுக்கு முன் வெளியான  நாவல் இது.  எழுத்தாளர் ஜி. நாகராஜனின் எழுத்தின் நேரடித் தன்மை, இன்றைய வாசகனைக்கூடத் திகைக்க வைத்து, பரவசத்துக்குள்ளாக்கும். அவர் எழுத்து, எந்த முலாமும், வார்த்தை ஜாலமும் இல்லாதது.  தமிழில் தனித்தன்மை கொண்ட அவரது எழுத்து, எந்தக் கட்டுப்பாட்டுக்கும் தலை சாயாதது.

கதையின் நாயகன் கந்தன் ஒரு குடிகார ரௌடி. தன் மனைவியையே 'வியாபாரத்துக்கு' அனுப்புவன். ரௌடித் தனம் செய்யும் அவன் வாழ்க்கையில் ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு, கதாநாயகன் கந்தனைப் பற்றி வாசகர்களாகிய நாம் கொள்ளும் முன்தீர்மானங்களை மறு பரிசீலனைச் செய்யத் தூண்டும் கதை. கதாமாந்தர்கள் மூலம் நம் சமூகக் கட்டுப்பாடுகளின் அடித்தளத்தைப் பற்றிய வினாக்களை இந்தக் கதை எழுப்புகிறது. இவை அனைத்தையும் விட,

Sunday, January 31, 2010

புயலிலே ஒரு தோணி

'புயலிலே ஒரு தோணி' மற்றும் 'கடலுக்கு அப்பால்' என்ற இரு நூல்களை மட்டும் எழுதிய திரு . சிங்காரம், ஒவ்வொரு நூலையும் எழுதி, அதைப் பதிப்பிக்கப் பத்து ஆண்டுகள் அலைந்திருக்கிறார்ஒரு கசப்பான வாழ்க்கையைத் தனிமையில் வாழ்ந்து மறைந்திருக்கிறார். திரு சிங்காரம் பற்றிய மேலதிக விபரம், இவ்விரு நூல்களின் 'தமிழினி' செம்பதிப்பின் முகவுரையில் அவரிடம் திரு முருகேச பாண்டியன் எடுத்த பேட்டியில்  உள்ளது. 1950 -களில், சாண்டில்யன் வகை, மற்றும் தட்டையான எழுத்தைப் படித்துப் பழகியிருந்தவர்களுக்கு சிங்காரத்தின் நடை புரியாமல், பிடிக்காமல் போனதில் வியப்பு இல்லைஅனாவசியத்துக்கு ஒரு கால் புள்ளியைக் கூட விரயமாக்காமல், உயரிய அங்கதச் சுவையும் கதை வீச்சும் கொண்டுள்ளது இந்தநூல்.

Tuesday, January 26, 2010

பிற தளங்களிலிருந்து..

இந்தப் பதிவில், பிற தளங்களிலிருந்து, பதிவர்கள் அனுமதியுடன் நூல் மதிப்புரைகளின் இணைப்புகள் கொடுக்கப்படும்.

1. சாருவின் "மலாவி என்றொரு தேசம்" நூலுக்கு, 'வள்ளியூர் ஞான பாஸ்கர்' அவர்கள் அளித்திருக்கும் மதிப்புரையைக் கீழ்காணும் சுட்டியில் காணலாம்.
மலாவி என்றொரு தேசம 

2 . வண்ண நிலவன் அவர்களின் 'ரெயினீஸ் ஐயர் தெரு' நூல் அறிமுகத்தை ஜெ.ஜெ. அவர்கள் மிகவும் அழகாக அளித்துள்ளார்.  அதனைக் கீழ்காணும் சுட்டியில் காணலாம்
ரெயினீஸ் ஐயர் தெரு காணலாம்.