Friday, June 21, 2013

ஆளுக்கொரு கிணறு

ஆளுக்கொரு கிணறு

(மொழி... பண்பாடு... கல்வி குறித்த கட்டுரைகள் )
ஆசிரியர்: ச. மாடசாமி
பதிப்பகம்: அருவி மாலை பதிப்பகம்
aruvi.ml@gmail.com

பரிந்துரை: கரிகாலன், சண்முகம்





எல்லாக் குழந்தைகளின் ஆரம்ப நிலைக் கல்வியைப் பற்றிய முடிவுகளைப் பெற்றோர்களே எடுக்கின்றனர்.  பெற்றோர்கள் எதை நல்ல கல்வி முறை என்று கருதுகிறார்கள்? உதாரணமாக கீழ்க்கண்ட வாக்கியங்களை உங்கள் நண்பர் உங்களிடம் சொன்னால் அவற்றைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?


1) எந்தப் பள்ளியில் அதிக நேரம் செலவழித்து, அதிகமான பாடங்களைச் சொல்லித் தருகிறார்களோ அதுவே நல்ல பள்ளி.
(இவங்க ஸ்கூலிலே ஒரு நாளைக்கு மூணு மணி நேரம் ஹோம் வொர்க் செய்யணும்).

2) எந்தப் பள்ளி பாடத் திட்டத்தில் கடினமான பாடங்கள் இருக்கிறதோ, அந்தப் பாடத் திட்டமே தரமானது. 
(இவங்க ஸ்கூலிலே இதை நாலாங் கிளாசிலேயே கவர் பண்ணி விட்டார்கள்).

3) எந்த வகுப்பறையில் மாணவர்கள் அமைதியாக உட்கார்ந்து, சப்தமின்றி ஆசிரியர் சொல்லுவதை கேட்கிறார்களோ, அதுவே நல்ல வகுப்பறை.
(இவங்க ஸ்கூலிலே பெல் அடிச்சா போதும்.  ஸ்கூலே கப்-சிப் என்று இருக்கும்).

4) எந்த ஆசிரியர் தேர்வுக்குத் தேவையான எல்லாப் பாடத்தையும்  பல முறை சொல்லித் தருகிறாரோ அவரே நல்ல ஆசிரியர். 
(இவங்க வாத்தியார் இந்த ஸிலபசை ஒரு வருடத்தில் நான்கு முறையாவது கவர் செய்து விடுவார், தெரியுமா?).

பெரும்பாலான, மத்திய வர்க்க குடும்பப் பார்வையில், மேலே சொல்லப்பட்டஅனைத்தும் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல கல்வியை அளிக்க உதவும் முறை என்று தானே நினைப்பீர்கள்?


Sunday, June 9, 2013

சிதைவுகள் (Things Fall Apart)



சிதைவுகள் (Things Fall Apart)
சினுவா அச்செபே

தமிழாக்கம்: என். கே. மகாலிங்கம்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்


நைஜீரியாவில் உள்ள இபோ என்ற கிராமத்தில் தொன்று தொட்டு வாழ்ந்த பழங்குடியினரும், கிருத்துவ மதத்தைப் பரப்ப வந்த மதப் பிரச்சாரர்களும்  சந்தித்த தருணத்தை,ஒரு பழங்குடியினரின் பார்வையில் இருந்து சொல்லும் நாவல் - சிதைவுகள்.  பெரும்பாலும் இத்தகைய சந்திப்புகள்  ஆண்டவர்களின் (அதாவது காலனி ஆதிக்க வாதிகளின் பார்வையிலோ அல்லது மதப் பிரசாரர்களின் பார்வையிலோ) தான் பெரும்பாலும் எழுதப்பட்டிருக்கும்.  காலனிய கால இந்திய வரலாற்றை வெள்ளையர்கள் எழுதியதை வைத்துக் கொண்டு தானே  இன்னும் பள்ளிக்கூடங்களில் சொல்லித் தந்து கொண்டு இருக்கிறோம்?