Thursday, March 10, 2011

பண்டைய இந்தியா - பாகம் 3








பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும்



ஆசிரியர்: டி.டி.கோசாம்பி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
தமிழாக்கம்: ஆர். எஸ். நாராயணன் (எஸ்.ஆர்.என். சத்யா)
பரிந்துரை: சண்முகம் / கரிகாலன்





பாகம் 3


ஓராயிரம் சதுர மீட்டர் அளவில், வேட்டைத் தொழிலையும், உணவு சேகரித்தலையும் மட்டுமே நம்பி ஒரு மனிதன் தான் வாழ முடியும். ஆனால், அதே நிலத்தில், ஓரளவிற்கு உணவு உற்பத்தி முறையை அறிந்த, விவசாயத்தின் அனுகூலங்களை அறிந்த, சமுதாயத்தில் நூறு பேருக்கு மேல் வாழ முடியும்.

உணவு சேகரித்து வாழ்ந்த பூர்வ குடி மக்கள், தங்களை விட மிக நேர்த்தியான உணவு உற்பத்தி முறைகளைக் கொண்ட ஆரிய சமூகத்தை நேர்கொண்ட போது அதீதமான பாதிப்புகளுக்கு உள்ளானது இயற்கையே. இப்படி இந்த இரு மாறுபட்ட சமூகங்களின் உரசலினால் வன்முறை உண்டாயிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. வன்முறையை தவிர்த்தது சாதி அமைப்பு என்கிறார் கோசாம்பி.

Friday, March 4, 2011

பண்டைய இந்தியா - பாகம் - 2




பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும்



ஆசிரியர்: டி.டி.கோசாம்பி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
தமிழாக்கம்: ஆர். எஸ். நாராயணன் (எஸ்.ஆர்.என். சத்யா)
பரிந்துரை: சண்முகம் / கரிகாலன்


பாகம் 2


வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனின் (pre-historic man) தேவைகள் உலகெங்கும் ஒத்து இருந்தன.  வாழ்ந்த புவி, தட்ப-வெட்ப சூழலுக்கு ஏற்ப அவன் கருவிகளை ஏற்படுத்தி, தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முயன்றான்.  பின்னர், பூர்வகுடி மனிதனின் வாழ்க்கையை இந்தியச் சூழலில் நமக்குக் கிடைக்கும் ஆதரங்களுடன் பொருத்திப் பார்க்கும் பொது, பல சுவாரஸ்யமான விஷயங்களை (இந்தியாவின் சாதி அமைப்பின் அடித்தளங்களையும் கூட) யூகிக்க முடியும் என்கிறார் கோசாம்பி.


முதலில் உலகெங்குக்கும் பொதுவான வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனின் வளர்ச்சி ஒரு பழங்குடி அமைப்பைத் (Tribal Organization) தோற்றுவித்தது.   இது எப்படி என்று பார்ப்போம்.