Wednesday, September 14, 2011

பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும் :தொகுப்பு


 பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும்: தொகுப்பு 
ஆசிரியர்:   டி.டி.கோசாம்பி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
தமிழாக்கம்: ஆர். எஸ். நாராயணன் (எஸ்.ஆர்.என். சத்யா)
பரிந்துரை: சண்முகம் / கரிகாலன்
  








டி. டி. கோசாம்பியின் 800 பக்கங்களே கொண்ட ௦௦புத்தகமான பண்டைய இந்தியாவைப் பற்றி எழுத ஆரம்பித்த போது அது இவ்வளவு நீளமாக வரும் என்று நாங்கள் இருவரும் நினைக்கவில்லை.  இந்தப் புத்தகத்தின் நடை கொஞ்சம் கடினமாக இருந்தாலும்,  கொஞ்சம் ஊன்றிப் படிக்க ஆரம்பித்ததில், கோசாம்பி இந்திய வரலாற்றை அணுகிய விதம் நாங்கள் இதுவரை படித்த இந்திய வரலாற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்று புலப்பட்டது.  அதனால், இந்தப் புத்தகத்தில் கோசாம்பி கூறியவற்றை முடிந்த அளவிற்கு தொகுத்து எழுத வேண்டும் என்ற எண்ணம் எங்கள் இருவருக்கும் வந்தது. அதன் விளைவே இந்த நீண்ட தொடர். உண்மையில் சொல்லப் போனால், இதை எழுதியதில் முக்கிய பலன் எங்கள் இருவருக்கும் தான் என்று சொன்னால் மிகையில்லை. 

Friday, September 2, 2011

இட்டு, உண்டு, இரும்

 

Give, Eat, And Live

Poems of Avvaiyar

Translated from the Tamil by
Thomas H Pruiksma
Red Hen Press
USD: $17.95
Available in Amazon.com
Review: Karikalan



ஔவையாரின் பாடல்களைத் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் அமெரிக்கக் கவிஞர் திரு. ப்ரூக்சிமா .  நான் இந்தப் புத்தகத்தை முதலில் இணையப் புத்தகக் கடையான அமேசானில் பார்த்த போது சற்றே திகைப்புக் கலந்த ஆர்வத்துடன் வாங்கினேன்.  வாங்கிப் படித்தபோது மொழி பெயர்ப்பின் தரத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.  இந்த மொழி பெயர்ப்பில் இருக்கும் பல பாடல்கள் நான் சிறுவனாக இருக்கும் போது அறிந்தவையே.  ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒய்வு பெற்ற பள்ளி ஆசிரியையாக இருக்கும் என் தாயார், இன்றும் கூட, ஔவையாரின் பாடல்களின் முதல் வரியை எடுத்துக் கொடுத்தால் சரளமாக முழுப் பாட்டையும் சொல்கிறார்கள்.  இந்தப் பாடல்கள் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் எழுதியது எனக் கருதுகிறார்கள்.  சங்க கால ஒளவையார் பாடல்கள் அல்ல இவை. 

Give, Eat, And Live (இட்டு உண்டு இரும்)

Give, Eat, And Live

Poems of Avvaiyar

Translated from the Tamil by
Thomas H Pruiksma
Red Hen Press
USD: $17.95
Available in Amazon.com
Review: Karikalan



When I saw the English translation of Avvaiyar's poems from the Tamil by  Mr. Pruiksma on Amazon.com, I bought it out of curiosity.   I knew many of Avvaiyar's poems in my childhood.  My mother retired as a school teacher over fifteen years ago, and to this day, she can recite many of Avvaiyaar's poems. These poems are thought to be written around the twelfth century AD by the Avvaiyar of the later period, unlike the Avvaiyaar of the Sangam era.