Showing posts with label சினுவா அச்செபே. Show all posts
Showing posts with label சினுவா அச்செபே. Show all posts

Sunday, June 9, 2013

சிதைவுகள் (Things Fall Apart)



சிதைவுகள் (Things Fall Apart)
சினுவா அச்செபே

தமிழாக்கம்: என். கே. மகாலிங்கம்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்


நைஜீரியாவில் உள்ள இபோ என்ற கிராமத்தில் தொன்று தொட்டு வாழ்ந்த பழங்குடியினரும், கிருத்துவ மதத்தைப் பரப்ப வந்த மதப் பிரச்சாரர்களும்  சந்தித்த தருணத்தை,ஒரு பழங்குடியினரின் பார்வையில் இருந்து சொல்லும் நாவல் - சிதைவுகள்.  பெரும்பாலும் இத்தகைய சந்திப்புகள்  ஆண்டவர்களின் (அதாவது காலனி ஆதிக்க வாதிகளின் பார்வையிலோ அல்லது மதப் பிரசாரர்களின் பார்வையிலோ) தான் பெரும்பாலும் எழுதப்பட்டிருக்கும்.  காலனிய கால இந்திய வரலாற்றை வெள்ளையர்கள் எழுதியதை வைத்துக் கொண்டு தானே  இன்னும் பள்ளிக்கூடங்களில் சொல்லித் தந்து கொண்டு இருக்கிறோம்?