Showing posts with label Pandaiya Indhiya - Part 2. Show all posts
Showing posts with label Pandaiya Indhiya - Part 2. Show all posts

Friday, March 4, 2011

பண்டைய இந்தியா - பாகம் - 2




பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும்



ஆசிரியர்: டி.டி.கோசாம்பி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
தமிழாக்கம்: ஆர். எஸ். நாராயணன் (எஸ்.ஆர்.என். சத்யா)
பரிந்துரை: சண்முகம் / கரிகாலன்


பாகம் 2


வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனின் (pre-historic man) தேவைகள் உலகெங்கும் ஒத்து இருந்தன.  வாழ்ந்த புவி, தட்ப-வெட்ப சூழலுக்கு ஏற்ப அவன் கருவிகளை ஏற்படுத்தி, தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முயன்றான்.  பின்னர், பூர்வகுடி மனிதனின் வாழ்க்கையை இந்தியச் சூழலில் நமக்குக் கிடைக்கும் ஆதரங்களுடன் பொருத்திப் பார்க்கும் பொது, பல சுவாரஸ்யமான விஷயங்களை (இந்தியாவின் சாதி அமைப்பின் அடித்தளங்களையும் கூட) யூகிக்க முடியும் என்கிறார் கோசாம்பி.


முதலில் உலகெங்குக்கும் பொதுவான வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனின் வளர்ச்சி ஒரு பழங்குடி அமைப்பைத் (Tribal Organization) தோற்றுவித்தது.   இது எப்படி என்று பார்ப்போம்.