Showing posts with label ஜெயமோகன். Show all posts
Showing posts with label ஜெயமோகன். Show all posts

Wednesday, June 16, 2010

மத்தகம் - ஜெயமோகன்

மத்தகம்

ஆசிரியர்: ஜெயமோகன்

பரிந்துரை: சண்முகம்


குட்டியாய் இருந்தபோதே வெல்லம் கலக்காத சோற்றை சாப்பிடாது கேசவன். ஒரு ராஜ்ஜியத்திற்கே அதிகாரம் செலுத்தும் இளையதம்புரானின் செல்லப் பிராணியாக இருப்பதனால் தான் தனக்கு இந்த அதிகாரம் என்று வெல்லச் சோற்றின் ருசியை விட அதிகாரத்தின் ருசியை கேசவன் சிறுபிராத்திலிருந்தே நன்கு உணர்ந்து தான்வளர்ந்திருக்கும். தன்னை ஒருமுறை 'சனியன்' என்று திட்டிய மூத்த யானைப்பாகன் சீதரன் நாயர் என்கிற ஆசானை, தன் கால்களுக்கு இடையில் கிடத்தி, தன் காலை நிதானமாய் அசானின் கால் மீது வைத்து மூங்கில் குச்சியை ஒடிப்பது போல ஒடித்து அதிகார அடுக்கில், தன் நிலையைத் தெளிவுற உணர்த்துகிறது. ஆசான், கேசவனின் இந்த அதிகார வெளிப்பாட்டை மிக இயற்கையான, ஏன் தெய்வாம்சமான் ஒன்றாகவே ஏற்றுக்கொண்டு,

Thursday, March 25, 2010

கண்ணீரைப் பின் தொடர்தல்


கண்ணீரைப் பின் தொடர்தல்
ஆசிரியர்: ஜெயமோகன்
பதிப்பகம்: உயிர்மை




இருபதாம் நூற்றாண்டில், அதுவும் அதன் பின் ஐம்பது ஆண்டுகளில், இந்தியாவில் பல அற்புதமான நாவல்கள் வெளிவந்துள்ளன.   இந்தியாவில் பெரும் சமூக, அரசியல், பொருளாதார, கலாசார, அமைப்புகளில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டம் இது.  நவீன யுகத்தின் எதையும் அறிவுப்பூர்வமாக நோக்கும் ஆய்வு முறை, பல நூற்றாண்டுகளில் எந்தக் கேள்விக்கும் உட்படாத தொன்மையான மரபுவாத முறைகளை, யந்திரத்தன்மையுடன் சந்தித்த காலம்.   சுதந்திரம் மட்டும் அடைந்து விட்டால், மக்களும், மன்னர்களும் சமமாவார்கள் என்று லட்சியவாதிகள் கனவும், தினவும் கொண்ட - ஒரு தேசத்தின் வரலாற்றில் அபூர்வமாக மட்டுமே வரக்கூடிய- காலம்.  இந்தக் காலகட்டம் இந்தியச் சமூகத்தின் அனைத்து மட்டங்களையும், அரசன் முதல் ஆண்டி வரை, மிக அடிப்படையான விதங்களில் பாதித்தது.  சமூகத்தில் பெரும் மாற்றங்களை, எதிர்பார்ப்புகளை உருவாகியது.  இந்த மாற்றங்கள், இந்திய எழுத்தாளர்களுக்கு செறிந்த இலக்கியங்களைப் படைக்க அற்புதமான விளைநிலங்கள் ஆயின.  பல நல்ல இலக்கியங்கள், தேர்ந்த மொழி பெயர்ப்பாளர்களின் கடின உழைப்பால் தமிழ் இலக்கிய உலகிற்கு வந்தன.

Monday, January 11, 2010

விஷ்ணுபுரம் - ஒரு விஸ்வரூபம்

அசுர வேகத்தில் எழுதும் ஜெயமோகனின் நூல்களில் ஏழாம் உலகத்திற்கு அடுத்து அதிகளவு விமர்சனத்துக்குள்ளான புத்தகம் இதுதான் என்று நினைக்கிறேன். ஏற்கனவே கல்கி போன்றவர்களின் தலையணை சைஸ் புத்தகங்களைப் படித்திருகிறேன். அனால், விஷ்ணுபுரத்தில், கலைச்சொற்கள் மிகுதி, கடின நடை, போன்ற விமர்சனங்களே மிகுதியாக இருந்ததால், இதனுள் கொஞ்சம் தயங்கித்தான் நுழைய நேர்ந்தது. பின்னர், படித்து முடித்ததும், Lord of the Rings - மற்றும் Matrix Trilogy பார்த்தது போலிருந்தது.

நிறைய விமர்சகர்கள், இது ஒரு இந்துத்துவா நாவல் என்று வைக்கும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. மாறாக இது, இந்து மத ஆச்சார்யர்களை,