Sunday, August 18, 2013

பெத்தவன்

 பெத்தவன், 40 பக்கங்கள்
ஆசிரியர் :  இமையம்
 பாரதி பதிப்பகம்


ஒரு spoiler alert :  இந்தக் கதை எழுதப்பட்டு ஓரிரு மாதங்களில் கதையில் உள்ளது போலவே தருமபுரி மாவட்டம் நத்தம் காலனி சம்பவம் நடைபெற்றது.  கடலூர் மாவட்டம் தொழுதூர் கிராமத்தில் ஆதி திராவிடர் நலத்துறை சார்ந்த பள்ளியில் ஆசிரியராக இருக்கும் இமையம் 'கோவேறு கழுதைகள்' மற்றும் 'ஆறுமுகம்' ஆகிய நாவல்கள் மூலம் புகழ் பெற்றவர்.  தாம் வாழும் மண்ணின் சமூக நிகழ்வுகளைத துணிச்சலாகப் படம் பிடித்துக் காட்டுவதால் அவரது எழுத்து யோக்கியமானதாக இருக்கிறது.

Thursday, August 15, 2013

ஆதியூர் அவதானி சரிதம்



 

ஆதியூர் அவதானி சரிம் 
வித்துவான் தூ.வி. சேஷையங்கார்
வகை: அம்மானை வடிவிலான நாவல்
விஜயா பதிப்பகம்
விலை: ரூ 60/-





கடந்த வருடம், விஜயா பதிப்பகத்தில் பல புத்தகங்கள் மொத்தமாக வாங்கிய பின்னர், பணம் கட்ட கீழே வந்த போது, கல்லாவில் இருந்த விஜயா பதிப்பக முதலாளி நான் வாங்கிய புத்தக்களைப் பற்றி பேச்சுக் கொடுத்துக் கொண்டே ரசீது எழுதினார்.