Friday, August 9, 2013
Friday, July 19, 2013
வாடிவாசல்
வாடிவாசல்
சி.சு. செல்லப்பா
வகை: குறுநாவல்
பதிப்பகம்: காலச்சுவடு
பரிந்துரை: கரிகாலன்/சண்முகம்வகை: குறுநாவல்
பதிப்பகம்: காலச்சுவடு
(குறிப்பு: இந்த அட்டைப் படத்தை எடுத்ததும் சி. சு. செல்லப்பா தான்)
நான் இதுவரை ஜல்லிக்கட்டை நேரடியாகப் பார்த்ததும் இல்லை, அது பற்றி குறிப்பிடத்தக்க அபிப்ராயங்களும் இருந்ததில்லை. தொலைக்காட்சியில் ஜல்லிக்கட்டைப் பற்றிய காணொளிகளின் வழியாக நான் அடைந்த மனச் சித்திரம் - காளைகள் மிரண்டு ஓடுவதும், ஆட்கள்அங்குமிங்கும் கும்பலாக துரத்திக் கொண்டு போவதும் தான் - வாடிவாசல் புத்தகம் படிக்கும் வரை.
Labels:
C.S. Chellappa,
Vaadivaasal,
சி.சு. செல்லப்பா,
வாடிவாசல்
Friday, July 12, 2013
தேவதேவன் கதைகள்
சிறுகதைத் தொகுப்பு
விலை: ரூ 50/-
சில சமயங்களில், பழைய புகைப்படத் தொகுப்பை புரட்டி பார்க்கும் போது மனதில் பல ஆண்டுகளாக நினைவு கூறாத எண்ணங்கள் சட்டென்று ஒரே கணத்தில் உங்களை வியாபித்து விடும். அந்த ஒரு கணத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் தான் உணர்ந்தவாறே மீட்டெடுத்து சொல்லும் சக்தி வாய்ந்த கதை சொல்லி தேவதேவன்.
விலை: ரூ 50/-
சில சமயங்களில், பழைய புகைப்படத் தொகுப்பை புரட்டி பார்க்கும் போது மனதில் பல ஆண்டுகளாக நினைவு கூறாத எண்ணங்கள் சட்டென்று ஒரே கணத்தில் உங்களை வியாபித்து விடும். அந்த ஒரு கணத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் தான் உணர்ந்தவாறே மீட்டெடுத்து சொல்லும் சக்தி வாய்ந்த கதை சொல்லி தேவதேவன்.
Labels:
Devadevan,
Short Stories,
தேவதேவன் கதைகள்
Monday, July 1, 2013
Friday, June 21, 2013
ஆளுக்கொரு கிணறு
ஆளுக்கொரு கிணறு
(மொழி... பண்பாடு... கல்வி குறித்த கட்டுரைகள் )
ஆசிரியர்: ச. மாடசாமி
பதிப்பகம்: அருவி மாலை பதிப்பகம்
aruvi.ml@gmail.com
ஆசிரியர்: ச. மாடசாமி
பதிப்பகம்: அருவி மாலை பதிப்பகம்
aruvi.ml@gmail.com
பரிந்துரை: கரிகாலன், சண்முகம்
எல்லாக் குழந்தைகளின் ஆரம்ப நிலைக் கல்வியைப் பற்றிய முடிவுகளைப் பெற்றோர்களே எடுக்கின்றனர். பெற்றோர்கள் எதை நல்ல கல்வி முறை என்று கருதுகிறார்கள்? உதாரணமாக கீழ்க்கண்ட வாக்கியங்களை உங்கள் நண்பர் உங்களிடம் சொன்னால் அவற்றைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
1) எந்தப் பள்ளியில் அதிக நேரம் செலவழித்து, அதிகமான பாடங்களைச் சொல்லித் தருகிறார்களோ அதுவே நல்ல பள்ளி.
(இவங்க ஸ்கூலிலே ஒரு நாளைக்கு மூணு மணி நேரம் ஹோம் வொர்க் செய்யணும்).
(இவங்க ஸ்கூலிலே ஒரு நாளைக்கு மூணு மணி நேரம் ஹோம் வொர்க் செய்யணும்).
2) எந்தப் பள்ளி பாடத் திட்டத்தில் கடினமான பாடங்கள் இருக்கிறதோ, அந்தப் பாடத் திட்டமே தரமானது.
(இவங்க ஸ்கூலிலே இதை நாலாங் கிளாசிலேயே கவர் பண்ணி விட்டார்கள்).
(இவங்க ஸ்கூலிலே இதை நாலாங் கிளாசிலேயே கவர் பண்ணி விட்டார்கள்).
3) எந்த வகுப்பறையில் மாணவர்கள் அமைதியாக உட்கார்ந்து, சப்தமின்றி ஆசிரியர் சொல்லுவதை கேட்கிறார்களோ, அதுவே நல்ல வகுப்பறை.
(இவங்க ஸ்கூலிலே பெல் அடிச்சா போதும். ஸ்கூலே கப்-சிப் என்று இருக்கும்).
(இவங்க ஸ்கூலிலே பெல் அடிச்சா போதும். ஸ்கூலே கப்-சிப் என்று இருக்கும்).
4) எந்த ஆசிரியர் தேர்வுக்குத் தேவையான எல்லாப் பாடத்தையும் பல முறை சொல்லித் தருகிறாரோ அவரே நல்ல ஆசிரியர்.
(இவங்க வாத்தியார் இந்த ஸிலபசை ஒரு வருடத்தில் நான்கு முறையாவது கவர் செய்து விடுவார், தெரியுமா?).
(இவங்க வாத்தியார் இந்த ஸிலபசை ஒரு வருடத்தில் நான்கு முறையாவது கவர் செய்து விடுவார், தெரியுமா?).
பெரும்பாலான, மத்திய வர்க்க குடும்பப் பார்வையில், மேலே சொல்லப்பட்டஅனைத்தும் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல கல்வியை அளிக்க உதவும் முறை என்று தானே நினைப்பீர்கள்?
Labels:
Education,
ஆளுக்கொரு கிணறு,
கல்வி,
ச. மாடசாமி



